வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் இரண்டையும் வாசல் அழியாகவோ கொல்லைப்புற வழியாகவோ உள்ளே வர விட்டால் கட்சி நாசமாகிவிடும். செங்கோட்டையனை வேண்டுமானால் மன்னிப்பு கேட்டால் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் பன்னீரும் தினகரனும் கொடிய விஷம். ஒருக்காலும் பழனிசாமி அவர்களை உள்ளே விடக்கூடாது. இரண்டு அரசியல் அனாதைகளுக்கும் அட்ரஸ் கொடுக்கும் வேலையை அதிமுக செய்யக்கூடாது. பாஜகவுக்கு அவ்ளோ அக்கறை இருந்தால் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துக்கொண்டது போல டிடிவி தினகரனின் அமமுக கட்சியை பாஜகவில் இணைத்துக்கொள்ள வேண்டியதுதானே. அதிமுகவில் இருந்து வந்த நயினார் நாகேந்திரனை பாஜகவில் இணைத்துக் கொண்டது போல பன்னீர் செல்வத்தை பாஜகவில் இனைத்துக் கொள்ள வேண்டியதுதானே.
அதிமுகவுக்கு நிபந்தனை விதிப்பது இருக்கட்டும். அண்ணாமலையை நீக்கிய பிறகு தமிழக பாஜகவின் வாக்கு வங்கியின் நிலைமையை சோதனை செய்தீர்களா அமித்ஷா ஜீ. 3 சதவீதத்தில் இருந்து 12 வரை வாக்கு வங்கியை அண்ணாமலை உயர்த்தி காட்டினார். 9 சதவீத வாக்காளர்களின் மனநிலை என்ன என்று தெரியுமா. தமிழக பாஜகவில் சுயநல சக்திகளால், மக்களின் அதிருப்தி அதிகமாகி கொண்டு போகிறது.
அதிமுகவின் பலவீனம் திமுகவுக்கு பலமாக இருப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் பலவீனம் பாஜகவுக்கு பலமாக உள்ளது என்பதும் உண்மை தானே!
எடப்ஸ் உறவினர்கள்? அவர்களுக்கு அதிமுக கட்சி விவகாரத்தில் என்ன வேலை ?
எடப்பாடி பழனிசாமி அவர்கள் முடிவு சரியானது தினகரன் கட்சி சார்பில் அந்த சின்னத்திலோ இல்லை தாமரை சின்னத்திலோ வேட்பாளராக நின்று கொள்ளலாம். எதிர் பேச்சு பேசாமல் அமைதியாக தினகரன் பன்னீர் சசிகலா செங்கோட்டையன் செல்லலாம். பழைய நாட்களை நினைக்காமல் இருந்தாலே அவர்கள் மனதில் வேதனை வராது. வரும் காலத்தில் சற்று தள்ளி சேர்ந்து போவோம் என்கிற மனம் வரவேண்டும்.
ஆசைதான்.. அவிங்க தனி சின்னத்தில் போட்டியிட்டு ஜெயிச்சு இவரை அரியணை ஏற்றி அழகு பாப்பாங்க.
திருவாளர்கள் பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் மற்றும் திருமதி. சசிகலா ஆகியோர் தனி, தனியாக நின்று தென்மாவட்ட மக்களின் ஓட்டுக்களை பிரித்தால் அதில் பலனடைவது, தி.மு.க தான் என்ற அடிப்படை உண்மையை உணர்ந்து திரு.தினகரன் தலைமையில், அ.ம.மு.க வில் திரு. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மற்றும் திருமதி. சசிகலா ஆகியோர் முதலில் ஒன்று சேர வேண்டும். இந்த கூட்டணி, தமிழகத்தில், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அணியில் தாமரை சின்னத்திலோ அல்லது தனி சின்னத்திலோ போட்டியிட வேண்டும். அப்போதுதான், தி.மு.க, மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க முடியும். நடிகர் விஜயை பற்றி, கவலைப்பட வேண்டியது நாம் தமிழர் கட்சி தான் இரட்டை இலைக்கு ஒட்டு போடுபவர்களும், பா.ஜ.க விற்கு ஒட்டு போடுபவர்களும் நடிகர் விஜயின் ரசிகர்கள் அல்ல. நடிகர் விஜயின் பெரும்பாலான ரசிகர்கள் தி.மு.க வை சேர்ந்த இளைஞர்கள் என்பதால், தி.மு.க தான் கவலைப்பட வேண்டும்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இன்னும் என் டி ஏ கூட்டணியில் குழப்பம் நீடிப்பது எதிரணிக்கே லாபம் என்பதை எ ப. நினைவில் கொண்டு உடன் நல்ல முடிவு எடுத்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதியாக இருப்பதெல்லாம் சரிதான்... ஆனால் அதற்கான செயல்திட்டம் முற்றிலும் சொதப்பலாக உள்ளது.
சிலநேரங்களில் இவரின் நடவடிக்கை அவரை திமுகவின் பி டீமாக யோசிக்க வைக்கிறது