உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு 90 சதவீதம் குறைந்து விட்டது

பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு 90 சதவீதம் குறைந்து விட்டது

மதுரை : 'பத்தாண்டுகளுக்கு முன் பொதுத்துறை வங்கிகளில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். 2025ல் 6128 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பு 90 சதவீதம் குறைந்ததாக' வங்கிகள், எல்.ஐ.சி., பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன தொழிற்சங்க பிரதிநிதிகள் நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் தெரிவித்தனர்.மதுரையில் நடந்த பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் வங்கிகள், எல்.ஐ.சி., பொதுத்துறை இன்சூரன்ஸ், அஞ்சல் துறை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் கூட்டமைப்பு, அகில இந்திய பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல பொருளாளர் சிவசுப்ரமணியன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரன் பேசியதாவது:10 மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 25 கோடி ஊழியர்கள் நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை கொரோனா காலகட்டத்தில் விவாதமின்றி மத்திய அரசு பார்லியில் நிறைவேற்றி, சட்டம் என்பதை 'லேபர் கோடு' என கொண்டு வந்தது. தற்போது 4 சட்டங்களே அதில் உள்ளன. இதுவும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இல்லை.இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம். இதை நடைமுறைப்படுத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திடீரென வெளியேற வாய்ப்புள்ளது. வேலை வாய்ப்பு அதிகரிக்க சாத்தியம் இல்லை. பொதுதுறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒருங்கிணைத்தால் தனியார் முதலீட்டுக்கு வேலையே இல்லை. இதனால் தான் மத்திய அரசு ஒருங்கிணைக்க மறுக்கிறது.மக்களின் வருமானம் குறைந்து வேலையின்மையும் அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பேர் வங்கிகளில் வேலை வாய்ப்பு பெற்றனர். 2025ல் வேலைக்கு தேர்வானோர் 6128 பேர் தான். வங்கி, இன்சூரன்ஸ், அஞ்சல் எல்லா துறைகளிலும் வேலைவாய்ப்பை மத்திய அரசு குறைத்து விட்டது. தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலிக்கு தேர்வு செய்யும் திட்டம் அதிகரித்ததால் தொழிலாளர் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் போக்கை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவித்தோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

montelukast sodium
ஜூலை 10, 2025 21:59

all sale


rama adhavan
ஜூலை 10, 2025 20:17

எல்லாம் ஏ டி எம், ஆன்லைன் சேவை வந்து விட்டன. ஏழை மக்கள், குறைந்த படிப்பாளிகள் மட்டுமே அரசு வங்கிகளை பென்ஷன் வாங்க மாத முதல் வாரத்தில் நாடுகிறார்கள். மீதி நேரத்தில் லாக்கர் சர்வீஸ்தான். அதையும் பேங்க் அட்டெண்டெர் செய்கிறார். கடன் கொடுப்பதில்லை. கடனை வசூல் செய்வது இல்லை.கணக்குகள்,காசோலை வரவு வைத்தல் எல்லாம் கணினி மயம். இந்நிலையில் இருக்கும் பணியாளர்களே அதிகம்.


Kulandai kannan
ஜூலை 10, 2025 17:22

உணவுக்கு பதில் சகாய விலையில் மாத்திரை கண்டுபிடித்தால், யாருக்கும் வேலை அவசியமிருக்காது. எலான் மஸ்க் அவர்களே, கொஞ்சம் மனது வையுங்கள்.


montelukast sodium
ஜூலை 10, 2025 22:00

2040 wait


Radha Krishnan
ஜூலை 10, 2025 15:39

For one policy issue, i wrote mail to LIC chennai HO, no response, called customer care, after several followups the response i got was tea time 1030-1115am, lunch time 1-2pm, afternoon tea 4-5pm and shop closes by 6pm. later went in person and got it done. whereas in case of LIC or HDFC, a mail is sufficient. LIC still lives in babu era. better to outsource its customer service.


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 12:16

எங்கள் பகுதியில் 2 கிமி சுற்றளவுக்குள் நான்கு ஸ்டேட் வங்கி கிளைகள். இணைய வங்கிச் சேவை வளர்ந்த பின்னும் வீணாக ஏன் இத்தனை?


கிருஷ்ணதாஸ்
ஜூலை 10, 2025 11:34

பணியில் ஓய்வு பெற்றவர்கள், தொழிற்சங்கத் தலிவர்களாகத் தொடர்வதே காரணம்!


Thravisham
ஜூலை 10, 2025 11:29

மத்திய அரசு என்ன திருட்டு த்ரவிஷமா அல்லது இத்தாலிய மாபியாவா? பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் ஏகப்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தி கண்ட மேனிக்கு சம்பளம் அலவன்ஸ் லீவு கொடுத்து கஜனாவை காலி செய்து விட்டார்கள். இதில் கான்கிராஸ்/த்ரவிஷன்கள்/உண்டிக்குலுக்கிகள் கை வரிசை மிக மிக அதிகம். இந்த கேடுகெட்ட தொழிற்சங்கங்கள் கடமையை மறந்து உரிமையை கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.


lana
ஜூலை 10, 2025 10:58

இதே போல தானே மாநில அரசு உம் அனைத்து துறைகளிலும் குறிப்பாக போக்குவரத்து துறையில் தினக்கூலி பணியில் ஆட்களை நியமிக்கப்பட்டுள்ளார். போராட்டம் நடத்தும் போது மாநில அரசு ஐ எதிர்த்தும் போராட்டம் நடத்தலாமே.


நிதிநாயுடு
ஜூலை 10, 2025 10:55

முத்ரா லோன் நிறைய குடுக்கறாங்களாம்.


அப்புசாமி
ஜூலை 10, 2025 10:53

இனிமே எல்லோருக்கும் ஃபாரின்ல அதுவும் காசா, உக்ரைன்ல கட்டுமான வேலைதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை