வாசகர்கள் கருத்துகள் ( 44 )
நமது நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களுக்கு எடை குறைவான உறுதியற்ற,தரமற்ற சோப்பு டப்பா வாகனங்களும் ஒரு முக்கியக் காரணம் ,நாளுக்கு நாள் ஏறிக்கொண்டு இருக்கும் எரிபொருள் விலை காரணமாக எடை குறைந்த வலுவற்ற வாகனங்களைத் தயாரிக்கும் வாகனத் தயாரிப்பாளர்கள் ,எரிபொருளின் மீது ஏகப்பட்ட வரிகளை விதித்து அதன் விலை வெகுவாக உயரக்காரணமாக இருக்கும் அரசாங்கமும் விபத்துக்கள் அதிகம் நடக்க ஒரு முக்கியக் காரணம் என்று நிச்சயம் அடித்துக் கூறி விடலாம்,எனவே குற்றவாளிக்கூண்டில் அரசாங்கமும் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் . .
நேர்கொண்ட பார்வை ராஜன்...???? இந்த மாதிரி கருத்துக்களை அபூர்வமாக அனுமதிக்கும் மலருக்கும் சேர்த்து பாராட்டுக்கள்...????
நமது நாட்டில் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை மதிப்பதே இல்லை .அவசரம் ,அலட்சியம் சுயநலம்,தலைக்கனம் ,முரட்டுத் தனம்,அதி வேகம் ,கவனக்குறைவு ,அசட்டுத் துணிச்சல் ,ஆணவம் ,பொறுமை இன்மை ,திட்டமிடாமல் பயணம் செய்வது ,பயணத்தில் போட்டி மற்றும் பொறாமை,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ,இடது புறமாக முந்த முயற்சிப்பது ,தவறான திசையில் மிகவும் வேகமாக ஓட்டுவது ,போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் செல்வது ,எச்சரிக்கை செய்யாமல் இண்டிகேட்டர்களைப் போடாமல் திடீர் என்று நிறுத்துவது மற்றும் திரும்புவது,குறுக்கே சாலையைக் கடப்பது முன் செல்லும் வாகனங்களை பின் வரும் வாகனங்களை ,எதிரே வரும் வாகனங்களை சரியாக கணித்து ஒட்டாமல் தவறு செய்வது ,முகப்பு விளக்குகளை அதிக பிரகாசமாக எரிய விட்டு ஒட்டிச் செல்வது ,பின் புறத்தில் உள்ள சிகப்பு விளக்குகளை சரியாக பராமரிக்காமல் மிகவும் மெத்தனமாக விடுவது,சரியான ஓய்வு இல்லாமல் ஓட்டுவது ,தூக்கக் கலக்கத்தில் ஓட்டுவது ,அரைகுறையாக போக்குவரத்து விதிகளை மதிப்பது ,வளைவுகளில் முந்துவது ,முந்த முயற்சிப்பது ,வாகனங்களை சரியாகப் பராமரிக்காமல் ஓட்டுவது ,போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மிக வேகமாக ஒட்டி செல்வது ,தங்களுக்கு உரிய லேன் முறையைப் பின்பற்றாமல் இஷ்டப்படி ஓட்டுவது,ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுவது ,கண் பார்வைக் குறைபாடுகளை மருத்துவப்பரிசோதனை செய்யாமல் இருப்பது,வாகனங்களை சரியான முறையில் பராமரிக்காமல் அலட்சியமாக ஓட்டுவது என பல்வேறு விஷயங்கள் சாலையில் பயணிப்போரின் விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புக்களுக்கு மிக முக்கியக் காரணங்கள் ஆகும்.குறிப்பாக பல இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்களின் இரு சக்க வாகனத்தில் பின் புறம் வண்டிகள் வருவதாகி அறிய உதவும் ரியர் வியூ மிரர் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது அவர்களுக்கும் ஆபத்து மற்றவர்களுக்கும் ஆபத்து என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.சாலை விதிகளை மதிக்காமல் இருந்தால் மேலும் விபத்துக்கள் அதிகரிக்கும் . .
எல்லாத்துக்கும் டாஸ்மாக் தான் காரணம் .....
95% கனரக வாகனங்களின் ஓட்டுனர்கள் சரியாக ஓட்டுகிறார்கள். ( இதில் பஸ் டிரைவர்கள் அடக்கம்). கவனமாக ஓட்டுகிறார்கள். ஆனால் water லாரிகள் ஓட்டுபவர்கள் அதிக trip அடிக்கவேண்டும் என்ற காரணத்தினால் சாலை விதிகளை மதிப்பதில்லை. ஆட்டோ மற்றும் share auto are rules unto themselves. இவைகள் நிறைய வாகனங்கள் போலீஸ்காரர்கள் பினாமிகள்.
சமீபத்தில் நானும் கணவரும் பூம்புகார் சென்று இரவினில் திரும்பினோம் , இரு வழி சாலையிலும் எதிரில் வரும் லாரிகளும் , ஆம்னி பஸ்களும் (இருவழி சாலையானாலும் ) ஆறு முதல் எட்டு விளக்கு போட்டுள்ளார்கள் பெரும்பாலும் LED விளக்கு தான் , சாலையே தெரியவில்லை . எவ்வளவு இடத்தில் தான் நிறுத்தி வருவது? இதனை முதலில் கலைவர்களா?
ரோடு போட்டதா கணக்கு எழுதி கொள்ளை அடித்து விட்டு... விபத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது
சாலை விபத்தில் தமிழகம் முதலிடம். தேசிய நெடுஞ்சாலை தேசம் முழுவதும். மாநில சாலை தான் அதிக விபத்துக்கு காரணம்? சாலை தரம் குறைவு. உரிய எச்சரிக்கை சிக்னல் பல இடங்களில் இல்லை. சுவரொட்டி, விளம்பர பலகை கவன ஈர்ப்பு. Sight distance கிடைப்பது இல்லை. உரிய வடிவமைப்பு செய்ய தடுக்கும் நில வழக்கு. ஆக்கிரமிப்பு, நடைபாதை கடைகள் மூலம் வாகன போக்குவரத்து நெரிசல். ஓட்டுநர் மூலம் விபத்து என்றால், 5 ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டுநர் திறன் அறிய முடியும். (Automatic Driving Test ). வாகன fitness சோதனை . வாகன பதிவு வங்கி கணக்கு, PAN, ஆதார் உடன் இணைப்பு. போலீசார் மூலம் பறிமுதல் செய்யும் வாகனம் 3 மாதம் பணமாக்கி RTO கணக்கில் செலுத்த வேண்டும். வழக்கு தனி. வாகன விதி மீறல் அபராதம் வங்கி கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
வாகனங்கள் பெருக்கம் குறுகிய சாலை.
மோசமான சாலைகள் ஒரு புறம் இருக்க மோசமான ஓட்டுனர்கள் மறுபுறம். சாலை விதிகளை துளி அளவு கூட மதிப்பதில்லை. போலீஸ்காரர் இருந்தால் சிக்கினாலும் நிற்கிறார்கள் இல்லையெனில் விதி மீறல்தான். மக்கள் மற்றும் அரசாங்கம் இரண்டுமே மாற வேண்டும்.
அனிதா மரணத்திற்கு NEET காரணம் என்பதால், NEET ஐ ரத்து செய்ய சொல்லும் நிதி (, ஒரு செங்கல்லை காட்டி எய்ம்ஸ் பற்றி சொல்லும் நிதி, அதை நீக்கும் ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கும் நிதி , இதற்க்கு ஏதாவது வழி வைத்திருப்பார்
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
16 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2