உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி பெங்கால் பைல்ஸ் பற்ற வைத்த நெருப்பு; மே.வங்க தேர்தலில் பா.ஜ.,வுக்கு பலன் தருமா?

தி பெங்கால் பைல்ஸ் பற்ற வைத்த நெருப்பு; மே.வங்க தேர்தலில் பா.ஜ.,வுக்கு பலன் தருமா?

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் நடந்த அசம்பாவிதங்கள், இன்றளவும் அங்குள்ள ஹிந்துக்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன. அதை, பிரமாண்ட திரையில் ஈரம் காயாமல் திரைப்படமாக எடுத்தால் என்ன ஆகும்? மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்., அரசின் ஒட்டுமொத்த தேர்தல் வியூகமும் ஒரே நொடியில் மாறிப் போகும் என அஞ்சப்படுகிறது. அந்த அளவுக்கு, தி பெங்கால் பைல்ஸ் திரைப்படத்தில் ரத்தமும், சதையுமாக பல காட்சிகள் அழுத்தமாக படமாக்கப்பட்டு இருப் பதாக கூறப்படுகிறது.

பாதிப்பு

குறிப்பாக நாடு சுதந்திரம் அடைந்த மறுநாள், கொல்கட்டாவில் நடந்த கலவரத்தில், ஹிந்துக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அக்டோபரில் நடந்த நவகாளி கலவரத்தில் ஹிந்துக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்ற விபரங்களை கண் முன்னே இந்த திரைப்படம் விவரிக்கிறது. தேசப் பிரிவினைக்குப் பின் மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களே அதிகமாக பாதிக்கப்பட்டதாக இந்த திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் சூழலில், இத்திரைப்படத்தை வெளியிட்டால் நிச்சயம் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அக்கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். திரிணமுல் காங்கிரசின் இந்த அச்சம் உண்மையானது தான் என்பது போல கடந்த 16ம் தேதி ஒரு சம்பவம் அரங்கேறியது. அதுவும் ஏதேச்சையாக, கொல்கட்டா கலவரம் ஏற்பட்ட அதே நாளிலேயே, அந்த சோகத்தை விவரிக்கும் திரைப்படத்தின் 'டிரைலர்' வெளியீட்டு விழா தடுக்கப்பட்டிருக்கிறது. கொல்கட்டாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், தி பெங்கால் பைல்ஸ் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவினர் தயாராக இருந்தனர். அப்போது, தடதடவென ஹோட்டலுக்குள் நுழைந்த போலீசார் மின் இணைப்பை துண்டித்தனர். திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்படவிருந்த, 'புரொஜெக்டர்' பறிமுதல் செய்யப்பட்டது. இதை பார்த்த இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி மிரண்டு போனார். 'படத்தின் வெளியீட்டை தடுத்தால் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்' என அவர் தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாதில் முஸ்லிம்கள் மக்கள் தொகை பெருகி வருவது, எல்லையோர மாவட்டங்களில் கோவில்கள் இடிக்கப்படுவது ஆகியவை ஹிந்துக்களிடையே லேசாக புகைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப் படுகிறது.

விபரீதம்

தவிர, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி வரும் முஸ்லிம்களாலும் பிரச்னைகள் பூதாகரமாகி உள்ளன. இந்த தருணத்தில் இந்தியா - பாக்., பிரிவினையின்போது நிகழ்ந்த சோக வரலாற்றை மேற்கு வங்க மக்கள் நினைவுகூர்ந்தால் ஆளுங்கட்சிக்கு விபரீதமாகவே முடியும் என்ற பேச்சும் நிலவுகிறது. அதிலும், தி பெங்கால் பைல்ஸ் திரைப்படம், திட்டமிட்டபடி வரும் செப்., 5ம் தேதி வெளியானால், ஹிந்துக்களை பாதுகாக்க பா.ஜ.,வால் மட்டுமே முடியும் என்ற பிம்பம் உருவாகும். அதை உடைக்கவே தற்போது திரிணமுல் காங்., முயன்று வருகிறது. ஒரு வகையில் பார்த்தால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கல் எறியும் கதை தான் இது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kamal 00
ஆக 19, 2025 20:36

விடுதலை நாளெட்டை அரசு உடமை ஆக்கி வெளியிட வேண்டும்.... கொஞ்ச நஞ்ச பேச்சா யப்பா,


V.Mohan
ஆக 19, 2025 16:30

காங்கிரஸ் கட்சியாலும்,நேரு,காந்தி கூட்டணியாலும் அமுக்கி மறைக்கப்பட்ட கலவர சம்பவங்களின் உண்மை மக்களுக்கு தெரிய வேண்டியது அவசியம். ஆனால் அதை படமாக எடுத்து துயரத்தை கிளறி விடுவதால் என்ன பயன்? காங்கிரஸின் ஒருதலைப்பட்சமான , ஒரு சமூகத்திற்கு தலைகீழாக நின்றாவது முட்டுக் கொடுப்பது என்கிற நிலைப்பாடு மிகவும் கேவலத்தை நாட்டுக்கு உண்டாக்கி உள்ளதை எடுத்து சொல்வது தான் சரியாக இருக்கும். அம்பேத்கர், சரோஜினி நாயுடு போன்ற நடுநிலையான தலைவர்கள் எதிர்த்த போதும் இந்தியா பிளவு படவும், பாக்கிஸ்தான் விரும்பியவர்கள், இந்தியர்களை கண்மண் தெரியாமல் படு கொலை செய்யவும் அநுமதித்த காந்தி,நேரு இருவர் மீதும் எந்த விமர்சனமும் எழாமல் அடக்கிய காங்கிரஸின் சாதனை மிகப்பெரியது. வந்தேறி மதத்தினர் கொலை செய்ய வரும்போதும் மெளனமாக ஏற்று உயிர்தியாகம் செய்ய சொன்ன காந்தியின் கருமையான மறுபக்கத்தை இந்தியர்கள் அறிய வேண்டியது அவசியம். அதைப்பற்றி பிரபலப்படுத்த வேண்டும். அதுதான் காங்கிரஸை விரட்ட உதவும்.


S Ramkumar
ஆக 19, 2025 14:15

தமிழகத்தில் இந்த படம் வெளிவராது.


Santhakumar Srinivasalu
ஆக 19, 2025 12:59

தடையை நீக்கி அந்த புத்தகத்தை வெளியிட்டு பொது ஜனங்களை படிக்க விடுங்க! பழைய காங்கிரஸ் சரித்திரம் வெளிவரும்!


Velayutham rajeswaran
ஆக 19, 2025 12:06

கொங்கு தமிழன் கோவை பைல்ஸ் எடுக்கலாம் என்ன தயக்கம்


Barakat Ali
ஆக 19, 2025 08:22

அக்கலவரங்கள் இஸ்லாமியர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது உண்மையே .....


SUBBU,MADURAI
ஆக 19, 2025 03:44

When the Muslim League d Direct Action Day, the streets of Bengal reportedly echoed with Maar ke lenge Pakistan, Lad ke lenge Pakistan. Now, the film The Bengal Files, which focuses on Direct Action Day, has been made. Highlighting such historical events through cinema is essential. Cinema is a powerful medium to bring forgotten or suppressed history to light. The Bengal Files is not just a film its a reminder of the grim realities of Direct Action Day and the consequences of appeasement. Truth must reach the people, no matter how uncomfor it is for some.


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஆக 19, 2025 01:55

அடுத்து குஜராத் ஃபிள்ஸ் என்று படம் எடுத்து கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது என்ன என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்.


ஆரூர் ரங்
ஆக 19, 2025 10:53

ரயிலை எரிச்சு கலகத்தைதூண்டிய .17 அமைதி குற்றவாளிகள் தண்டனை வாங்கி ஜெயிலில் இருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை