உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓரணியில் தமிழகத்துக்கு ஓ.டி.பி., பெற தடை வழக்குப் போட்டவர் கேவியட் மனு தாக்கல்

ஓரணியில் தமிழகத்துக்கு ஓ.டி.பி., பெற தடை வழக்குப் போட்டவர் கேவியட் மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக சட்டசபைத் தேர்தலை அணுகுவதற்காக, தி.மு.க., தரப்பில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழகம் என்ற பெயரில் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையையும் வேகமாக நடத்தி வருகிறது அக்கட்சி. இதற்காக, வீடு தோறும் செல்லும் தி.மு.க.,வினர், பொதுமக்களிடம் ஆதார் எண் கேட்டு, ஓரணியில் தமிழகத்துக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி வாயிலாக, பதிவு செய்கின்றனர். பின், சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி.,யை கேட்டு வாங்கி, அதையும் உள்ளிடு செய்ய, சம்பந்தப்பட்டவர் தி.மு.க.,வில் இணைக்கப்பட்டு விட்டதாக, சம்பந்தப்பட்டவர் மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது. இந்தப் பணிகளை, தமிழகம் முழுதும் படு வேகமாக தி.மு.க.,வினர் செய்து வர, அ.தி.மு.க., தரப்பில் இதற்கு எதிர் வினையாற்ற முடிவெடுத்தனர். ஆதார் வாயிலாக, ஓ.டி.பி., பெற்று, அதை தி.மு.க., செயலியில் உள்ளிடுவது, தனி மனித புள்ளி விபரங்களை திருடுவதற்கு சமமானது; அதனால், தி.மு.க.,வின் இந்த முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, அதிகரை அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்குப் பின், 'தி.மு.க.,வின் ஓரணியில் தமிழகம் திட்டத்துக்காக, பொதுமக்களிடம் இருந்து ஆதார் ஓ.டி.பி., கேட்டு பெறுவது, சட்ட ரீதியில் தவறானது; அதனால், தி.மு.க.,வின் ஓரணியில் தமிழகம் திட்டத்துக்காக ஓ.டி.பி., பெறுவது தடை செய்யப்படுகிறது' என நீதிபதிகள் அறிவித்தனர். இந்நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தி.மு.க., தரப்பு தயாராகி வருகிறது. இந்தத் தகவல், அ.தி.மு.க., தரப்புக்குச் செல்ல, 'தன் தரப்பு கருத்தைக் கேட்காமல், எவ்வித உத்தரவும் போடக் கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார் -டில்லி சிறப்பு நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Subramanian N
ஜூலை 24, 2025 23:35

என் வீட்டிற்கு திமுக தொண்டர்கள் வந்து என் செல் போன் எண்ணை கேட்டார்கள் , நான் எதற்கு கேக்கிறீர்கள் என்று கேட்டேன், அதற்கு அவர்கள் சர்வே செய்வதற்காக என்று ஒருவர் சொன்னார். அவரோடு வந்தவர் இல்லை சார் , உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக வந்துள்ளோம் என்றார். வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினேன் . நமக்கு திமுகவை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது.


M S RAGHUNATHAN
ஜூலை 24, 2025 09:43

கபில் சிபல் அவர்களுக்கு சென்னையில் ஒரு Posh apartment parcel.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 24, 2025 08:30

மூட்டையாக பணம் செலவழிக்க திமுக ரெடி. மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு தர நீதிமன்றங்கள் ரெடி.


D Natarajan
ஜூலை 24, 2025 07:37

தீய மு க விடம் பெட்டி நிறைய இருக்கிறது. ?


குமார்
ஜூலை 24, 2025 06:34

எனக்கும் அப்படி தான் வந்தது..


RAAJ68
ஜூலை 24, 2025 06:25

DMK SUPREME COURT


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை