உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  பா.ம.க., இருக்குமிடத்தில் வி.சி., இருக்காது: தி.மு.க.,வுக்கு திருமாவளவன் திடீர் செக்

 பா.ம.க., இருக்குமிடத்தில் வி.சி., இருக்காது: தி.மு.க.,வுக்கு திருமாவளவன் திடீர் செக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ''தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால், நாங்கள் அக்கூட்டணியில் இருக்க மாட்டோம்,'' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஜனநாயக சக்திகள், அவரவர் தாய்மொழியை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். தேவையானால், போராட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை, தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமை வகிக்கவில்லை. பழனிசாமியும் அதை ஒப்புக் கொண்டவர் போலவே பேசுகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=av1f0aeg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி மலரும்' என்றே பேசுகிறார். மாபெரும் மக்கள் சக்தி கொண்ட அக்கட்சியால், தங்கள் கட்சியே ஆட்சி அமைக்கும் என சொல்ல முடியவில்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், எந்த கூட்டணியில் சேர வேண்டும் என்பது குறித்து, அவர் தான் முடிவெடுக்க வேண்டும். கடந்த 2011ல், ஜாதி-மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சியுடன் கூட்டணி கிடையாது என, வி.சி.,க்கள் சார்பில் முடிவெடுத்துள்ளோம். அதில், இன்றும் உறுதியாக இருக்கிறோம். பா.ம.க.,வின் ஒரு அணி தே.ஜ., கூட்டணியில் உள்ளது. இன்னொரு அணியை, தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தான் முடிவெடுக்க வேண்டும்.மத்திய பா.ஜ., அரசையோ, அதன் செயல்பாடுகளையோ த.வெ.க., தலைவர் விஜய் விமர்சிப்பதில்லை; எதிர்க்கிறோம் என்று மட்டும் சொல்கிறார். அதற்கான காரணம் கூறவில்லை. இந்த தேர்தலில் த.வெ.க., தனித்துதான் போட்டியிடும் என தெரிகிறது. மத்திய அரசு திட்டங்களுக்கு மட்டுமே, பா.ஜ., அரசு நிதி ஒதுக்குகிறது. மாநில அரசின் திட்டங்களான கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், நிதி தர முடியாது என, மத்திய அமைச்சர் வெளிப்படையாக கூறுகிறார். தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையாக நடத்துகிறது. தி.மு.க.,விடம் இரண்டு இலக்கத்தில் தொகுதிகள் கேட்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Raj S
ஜன 27, 2026 01:25

பார்ரா பிச்சை சோறுக்கு வந்த கோவத்த


sankaranarayanan
ஜன 26, 2026 21:51

இனி இந்த இரண்டு கட்சிகளுமே இருக்கவே இருக்காது


vivek
ஜன 26, 2026 21:29

அரசியலில் நோ செக், ஒன்லி கேஷ்.


PATTALI
ஜன 26, 2026 17:27

விசிலப்போடு - விசிலுக்குப்போடு - மற்றவரெல்லாம் ஓடு..


Ramaraj P
ஜன 26, 2026 17:22

இனிமேல் மாளால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை.


பேசும் தமிழன்
ஜன 26, 2026 16:27

நீங்கள் இருப்பது இண்டி கூட்டணி.... அவர்கள் இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி.... அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார்கள்..... இதில் என்ன தவறு ??


sankar
ஜன 26, 2026 15:07

கட்டப்பஞ்சாயத்து எங்க இருந்தா என்ன


Arjun
ஜன 26, 2026 13:21

சாதி அரசியல் செய்யும் திருமா பாமக பற்றி பேசுகிறது,திமுக தான் உங்கள் ஏஜமான் அவர்கள் கொடுக்கும் இடங்களை பெற்று கொள்ளுவதே சிறப்பு .இல்லையென்றால் த வெ க உங்களின் தேர்வாக இருக்கும்


பேசும் தமிழன்
ஜன 26, 2026 12:46

பாமகவை கூட்டணியில் சேர்த்தால் ... நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவோம் என்று கூறு பார்க்கலாம் .... சொல்லு .... நீ தான் தைரியமான ஆளாயிற்றே.... சொல்லு பார்க்கலாம் .... முடியாது .... ஓவர். சவுண்ட் உடம்புக்கு ஆகாது.


Rameshmoorthy
ஜன 26, 2026 12:43

Planning for more money this time???? His party is shame for TN


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை