வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சிறிய அளவில் குறைபாடு இருந்தாலும் சட்ட சிக்கல் வரும். வழக்கில் சிக்கினால், சொத்து யாருக்கு எப்போது பயன் தரும் என்று அறிய முடியாது. பத்திர பதிவின் போது விற்பவர் முன் பத்திர முக்கிய விவரம், வீட்டு வரி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு , பட்டா மாறுதல் விவரம் தேவை. மேலும் வங்கி பரிவர்த்தனை இல்லாத பவர், ஒத்தி , கடன், கிரய பத்திரம் பெரும்பாலும் மோசடி பதிவுகள். ஒரே உத்தரவில் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். அரசுக்கு வருவாய் என்ற போர்வையில் மோசடி பதிவுகள் ஏராளம். வழக்கை ஆயுளுக்கும் தீர்க்க முடியாது. சொத்தை வழக்கில் வாங்கியவர், அல்லது வக்கீல், நீதிபதிக்கு, எழுதிக்கொடுத்தால் தான் நமக்கு நிம்மதி. இல்லாவிட்டால் திறந்தவெளி சிறை போன்று வாழ்வு மாறும்.
அரசின் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பும் புகார்கள் முறையாக பரிசீலிக்கப் படுவதில்லை தீர்வு காணப்படுவதில்லை என்பதை பற்றி முதலமைச்சர் அக்கறை கொள்ளவில்லை. அதை விசாரணை செய்வதற்கு எந்தவித விசாரணை அமைப்புக்கும் உத்தரவிடவில்லை மாறாக அதிக வருமானம் வர வேண்டும் அப்போதுதான் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்க முடியும் என்பதற்காக குறிப்பிட்ட வருமானம் வரும் துறைகளாக பார்த்து அக்கறை செலுத்துவது அல்பத்தனம்.
திருநெல்வேலி ஜில்லா பணகுடி சப் ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் ஒரு லஞ்ச கூடாரம் ஆக ஆகி விட்டது. அந்த சப் ரெஜிஸ்ட்ரார் ய் அர்ரெஸ்ட் செய்ய அரசாங்கம் முன் வரவேண்டும்.
கையும் களவுமாகப் பிடித்தாலும் இடமாற்றம் மட்டுமே தண்டணை.
போன் கால்களை ரெகார்ட் செய்தும் யாருடன் பேசுகிறார்கள் என்ற விவரத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டும். அந்த விபரங்களை சம்பந்தப்பட்ட காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கும் நேரடியாக தெரிவிக்கும் வகையில் இருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு காவல்துறையும் நேர்மையாக விசாரணை நடத்தி அறிக்கையை பதிவுத் துறைக்கு 2 நாட்களில் அனுப்ப வேண்டும்.
இதில் என்ன ஆச்சரியம். ரேட் படிந்து இருக்காது. அவ்வளவுதான்
ஊழலின் மொத்த உருவமே பத்திரப்பதிவு துறைதான். அங்கு லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள்.எல்லாம் சரியாக இருந்தாலும் எதையாவது ஒரு காரணம் கூறுவார்கள். இதனால்தான் பொதுமக்களும் வேறு வழியின்றி காசு கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு குடும்பம் என்று ஒன்று உள்ளது. அதை அவர்கள் நினைத்தால் இதை செய்ய மாட்டார்கள். இதன் விளைவு அவர்களின் அடுத்த தலைமுறையை பாதிக்கும். இதுதான் அவர்களின் வாரிசுகளுக்கு விட்டு செல்கிறார்கள். மனசாட்சி உள்ளவர் சிந்திக்க வேண்டும்.
புது வகை ஏமாற்று வேலை..
‘வர வேண்டியதில்’ சுணக்கம் அதனால் பதிவு செய்யவில்லை என்று உண்மையை சொல்லிவிடப்போகிறார்களா என்ன ?
லஞ்சம் வரவில்லை என்ற கவலைதானே உங்களுக்கு?