உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லோக் அதாலத்தில் 1,060 வழக்குகள் ரூ. 7.43 கோடிக்கு தீர்வு

லோக் அதாலத்தில் 1,060 வழக்குகள் ரூ. 7.43 கோடிக்கு தீர்வு

புதுச்சேரி : புதுச்சேரி தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,060 வழக்குகள் முடிக்கப்பட்டு, 7 கோடி, 43 லட்சத்து, 65 ஆயிரத்து, 608 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதில், நிலுவையில் உள்ள வழக்குகளும், எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், 9 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில், 1 அமர்வை தலைமை நீதிபதி சந்திரசேகரன் மற்றும் உறுப்பினர் செயலர் அம்பிகா ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், காரைக்காலில், 4 அமர்வுகளும், மாகியில், 1 அமர்வும், ஏனாமில், 1 அமர்வும் ஆக, 16 அமர்வுகள் செயல்பட்டது. இதில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மற்றும் நேரடியான வழக்குகள், 6,541 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 1,060 வழக்குகள் முடிக்கப்பட்டு, 7 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 608 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இதில், நீதிமன்ற நிலுவையில் இருந்த, 927 வழக்குகள் முடிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை