உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 3 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் ரூ. 25 கோடியில் தரம் உயருகிறது

3 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் ரூ. 25 கோடியில் தரம் உயருகிறது

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள உயர் கல்வி துறை அறிவிப்புகள்: மத்திய அரசு பிரதமர் உயர் கல்வித் திட்டத்தின் கீழ் 25 கோடி மதிப்பில் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரி, மாகி மகாத்மா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய மூன்று கல்லுாரிகளும் தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஒரு டிஜிட்டல் தளம் கல்லுாரி மேலாண்மை திட்டம் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை