உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் கத்தியுடன் நின்று பொதுமக்களை மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை, தாகூர் கலைக்கல்லுாரி அருகே 3 வாலிபர்கள் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் அன்சார் பாஷா மற்றும் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.அதில், லாஸ்பேட்டை செயின்ட்பால்பேட் பகுதியை சேர்ந்த மதன், 19; கிருபானந்த, 18; மடுவுப்பேட் பகுதியை சேர்ந்த லோகேஷ், 18; என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை