உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: போதையில் ரகளை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.உருளையான்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மறைமலையடிகள் சாலை பாலத்தின் கீழ் 2 வாலிபர்கள் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த சிதம்பரம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் 23, புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (எ) சக்திவேல், 37; ஆகியோரை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இதேபோல் புதுச்சேரி குண்டுசாலை பகுதியில் பொதுமக்களிடம் தகராறு செய்த சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்த முகமது நிஜார் 32, என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை