உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுப் பதிவு 30 நிமிடம் தாமதம்

ஓட்டுப் பதிவு 30 நிமிடம் தாமதம்

பாகூர், : பிள்ளையார்குப்பம் ஓட்டுச் சாவடியில், இயந்திரம் பழுதானதால் 30 நிமிடம் ஓட்டு பதிவு தடைபட்டது. ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மையத்தில் நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டு வந்தனர். மதியம் 1:30 மணியளவில் ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. பின்னர் மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு, ஓட்டுப் பதிவு மீண்டும் துவங்கியது. இதனால், 30 நிமிடம் ஓட்டுப் பதிவு தடைபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை