உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி ஆசிரியரின் மனைவியை தாக்கி காரைக்காலில் 62 சவரன் கொள்ளை

மாஜி ஆசிரியரின் மனைவியை தாக்கி காரைக்காலில் 62 சவரன் கொள்ளை

காரைக்கால் : காரைக்காலில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவியை தாக்கி, 62 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்துார், கந்தங்குடி சாலையை சேர்ந்தவர் ராமலிங்கம்; ஓய்வு பெற்ற ஆசிரியர். தற்போது ஏல சீட்டு நடத்தி வருகிறார். இவரது மனைவி கனகவள்ளி.நேற்று முன்தினம் இரவு ராமலிங்கம் ஏல சீட்டு பணத்தை கொடுக்க வெளியில் சென்றார். அப்போது வீட்டிற்குள் முக மூடி அணிந்து புகுந்த மூவர் தனியாக இருந்த கனகவள்ளியை தலையில் தாக்கி, அவர் அணிந்திருந்த 15 சவரன் தாலி செயின் மற்றும் பீரோவில் இருந்த நகைககள் என, 62 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.காயமடைந்த கனகவள்ளியை மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த அம்பகரத்துார் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரோகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.,யில் பதிவான காட்சிகள் மூலம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்