மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக தவித்த 6 வயது சிறுமியை, அவரது தாயை கண்டறிந்து போலீசார் ஒப்படைத்தனர்.புதுச்சேரி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, 6 வயது சிறுமி தனது தாயை பிரிந்து தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். அவரை, பொதுமக்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பெரியக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடலுாரைச் சேர்ந்தவர் என்பதும், குடும்பத்துடன் கடற்கரை வந்ததாக தெரிவித்தார். தொலைபேசி எண்கள் ஏதும் தெரியவிக்கவில்லை.இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசாரையும் கடற்கரைக்கு அனுப்பி, சிறுமியின் பெற்றோரை கண்டறிய உத்தரவிட்டார்.போலீஸ் தேடலில் சிறுமியின் தாய் கடலுார் செரீனாபேகம் கண்டறியப்பட்டார். போலீஸ் நிலையம் வரவழைத்து உரிய விசாரணைக்கு பிறகு சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.போலீசாருக்கு நன்றி தெரிவித்து சிறுமி மற்றும் அவரது தாய் புறப்பட்டு சென்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago