மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
7 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
7 hour(s) ago
புதுச்சேரி: திருபுவனை வேலழகன் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்து 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். திருபுவனை சின்னபேட் வேலழகன், 42; என்.ஆர்.காங். பிரமுகர். இவர் கடந்த 2017 ஏப். 19 ம் தேதி சன்னியாசிக்குப்பத்தில் கொலை செய்யப்பட்டார். திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. கார்த்திகேயன் (எ) ரமேஷ், 42; சிவராமன், செங்கதிரவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்த ரமேஷ் தலைமறைவானார். நீதிமன்ற வழக்கு விசாரணையிலும் ஆஜராகாமல் இருந்ததால் பிடிவராண்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரமேஷ், சென்னை கொளத்துாரில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago