உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேனீ வளர்ப்பு கருத்தரங்கம்

தேனீ வளர்ப்பு கருத்தரங்கம்

அரியாங்குப்பம் : புதுச்சேரி வேளாண் கல்லுாரி மற்றும் மதுரை வாப்ஸ் நிறுவனம் இணைந்து தேனீ வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தியது. தவளக்குப்பத்தில் நடந்த கருத்தரங்கிற்கு வேளாண் அறிவியல் கல்லுாரி தாளாளர் கணேஷ் தலைமை தாங்கினார். உதவிப் பேராசிரியர் மணிகண்டன் வரவேற்றார். மதுரை வாப்ஸ் நிறுவன செயலாளர் அருள் முன்னிலை வகித்தார். ஹனிபார்ம் நிறுவனர் சுதந்திர செல்வன், அண்ணாமலை ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். கருத்தரங்கில், தேனீ வளர்ப்பு குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினர். கல்லுாரி உதவி பேராசிரியர் காரல் மார்க்ஸ், வினிதா, மாணவர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ