பாம்புகள் நடமாட்டம்
அபிேஷகப்பாக்கம், சேத்திலால் வீதியில் உள்ள காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.தட்சிணாமூர்த்தி, அபிேஷகப்பாக்கம். கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
ரெட்டியார்பாளையம், பொன் நகரில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.மோகன்ராஜ், ரெட்டியார்பாளையம். சாலையில் கழிவுநீர் தேக்கம்
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் இயங்கும் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 2வது மெயின் ரோட்டில் தேங்கி நிற்கிறது.கண்ணன், தட்டாஞ்சாவடி. போக்குவரத்து நெரிசல்
வில்லியனுார் முதல் நெல்லித்தோப்பு வரை வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.ரஜினி முருகன், வில்லியனுார். சாலையில் பேனர்
முதலியார்பேட்டை சாலையில் பேனர்கள் வைத்துள்ளதால், வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.மதி, முதலியார்பேட்டை.