உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மோதி சமையலர் பலி

பைக் மோதி சமையலர் பலி

புதுச்சேரி: பைக் மோதி சமையல்காரர் இறந்தார்.தஞ்சாவூம் மாவட்டம், திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 45; சமையல்காரர். இவரது மனைவி பிரபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்கள் முன், முத்துசாமி சமையல் வேலைக்காக புதுச்சேரி, காலாப்பட்டிற்கு வந்து தங்கினார்.நேற்று முன்தினம் மாலை அவர், கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு வித்யா நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற பைக் அவர், மீது மோதியது. படுகாயமடைந்த முத்துசாமி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விபத்து குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி