| ADDED : ஆக 12, 2024 05:07 AM
அரியாங்குப்பம்: சுதந்திர தின விழாவையொட்டி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவையொட்டி, அரியாங்குப்பம் கொம்யூன் கிராம பஞ்சாயத்துகளில் சுதந்திர தினத்தன்று, காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.அதில், அரியாங்குப்பம் மேற்கு கிராம பஞ்சாயத்து, பி.சி.பி., நகர் சமுதாய நலக்கூடம், கிழக்கு கிராம பஞ்சாயத்து கொம்யூன் அலுவலகத்தில் நடக்கிறது. அதே போல, ராதாகிருஷ்ணன் நகர் கிராம பஞ்சாயத்து அலுவலகம், காக்கையான்தோப்பு, மாரியம்மன் கோவில் அருகில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில், மணவெளி கிராம பஞ்சாயத்து, சமுதாய நலக்கூடம், தவளக்குப்பம் பழைய மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி, நல்லவாடு, சமுதாய நலக்கூடம், அபிேஷகப்பாக்கம் அம்பேத்கர் சமுதாய நலக்கூடம், டி.என்., பாளையம் சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட 14 கிராம பஞ்சாயத்துகளின் கிராம சபை கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பதால், மக்கள் குறைகளை அவர்களிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.