உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

மணக்குள விநாயகர் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.விழாவில், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லுாரியின் இயக்குநர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார்.சீனிவாசன் என்.ஜி அண்ட் கோ நிறுவனர் சீனிவாசன், புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் மனோகரன் ஆகியோர் நேர மேலாண்மை, பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறிய சாதனையாளர்கள் குறித்தும், மெட்டாஸ் ஸ்கில் மற்றும் ஸ்டார்டப்- தொழில் முனைவோராக விரும்பும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை மற்றும் வழிகாட்டுதல் குறித்து விளக்கம் அளித்தனர்.மேலாண் இயக்குநர் தனசேகரன், கல்வி குழுமத்தில் செயல்படும் அனைத்து கல்லுாரிகளின் சாதனைகள் மற்றும் பாடப் பிரிவுகளின் எண்ணிக்கைகள் குறித்தும், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொண்டு வாழ்வில் சிறந்த சாதனையாளர்களாக, தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என, பேசினார்.இயற்பியல் துறைத்தலைவர் ஜெயவர்தனன் நன்றி கூறினார். ஆங்கிலத்துறை தலைவர் இஷ்ரத் ஜஹான் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Boominathan
ஜூலை 22, 2024 07:58

எத்தனை மாணவர்களின் எதிர்காலம் நாசமாகப் போகிறதோ என்று தெரியவில்லை. மணக்குள விநாயகர் என்ற பெயரை பார்த்து இது பக்திமயமாக இருக்கும் கல்லூரி என்று வண்ணக்கனவுகளோடு செல்ல இருக்கும் மாணவர்களே இந்த கல்லூரியில் பக்தி கிடையாது. பணம் மட்டுமே பேசும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். உங்கள் வாழ்க்கையில் நீங்களே மண் அள்ளி போட்டுக் கொள்ளாதீர்கள்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ