தர்ம சம்ரக் ஷண சமிதியில் சண்டி ஹோமம் துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் 5ம் ஆண்டு சண்டி ஹோமம், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது.வரும் 12ம் தேதிவரை நடைபெறும் இந்த ேஹாமத்தில், முதல் நாளான நேற்று காலை விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, அஸ்வபூஜையுடன் துவங்கியது. ஆதிபராசக்தியின் பெருமைகளை கூறும் சப்தசதீ என்கிற 700 ஸ்லோகங்கள், 13 அத்யாயங்கள் கொண்ட மந்திரங்களால் யாகம் நடந்தது. அத்யாத்திற்கு ஒன்றாக 13 முறை யாக பூஜை நடந்தது. ஒவ்வொரு முறையும், புடவை, பழங்கள், மங்கலப்பொருட்கள், மூலிகைகள் சேர்க்கப்பட்டது. மகா பூர்ணாஹூதியில் பட்டுபுடவை, தங்கதாலி, ஏராளமான மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டது.வரும் 12ம் தேதிவரை நடைபெறும் இந்த ேஹாமத்தில், பக்தர்கள் பங்கேற்று பயன்பெற தர்ம சம்ரக் ஷண சமதி அழைப்பு விடுத்துள்ளது.