மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை, பெரிய திரையில் கண்டு களிக்கும், 'ஐ.பி.எல் பேன் பார்க்' நிகழ்ச்சி நேற்று துவங்கியது.இந்தியாவில், 50க்கும் மேற்பட்ட நகரங்களில், தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்., போட்டிகளை, ரசிகர்கள் பலரும், ஒன்றாக இணைந்து பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பை பார்க்கும் வகையில், 'ஐ.பி.எல்., பேன் பார்க்' நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்நிகழ்ச்சி, பி.சி.சி.ஐ., மற்றும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி இணைந்து இரண்டு நாட்கள் லாஸ்பேட்டை அரசு கல்லுாரி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு, நேற்று துவங்கியது.இது குறித்து பி.சி.சி.ஐ., செயல்பாடு மேலாளர் அமித் சித்தேஷ்வர் கூறியதாவது:தாகூர் அரசு கல்லுாரி மைதானத்தில் ஐ.பி.எல்., பேன் பார்க் நிகழ்ச்சி இரண்ட நாட்கள் நடக்கும் நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில், மூன்று ஐ.பி.எல்., போட்டிகள் நேரடியாக பெரிய திரையில் இலவசமாக காணலாம்.நேற்று மாலை 6:30 மணிக்கு துவங்கிய பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கான போட்டியினை இளைஞர்கள், பொதுமக்கள் கண்டு களித்தனர். இன்று மதியம் 2:30 மணிக்கு சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான ஆட்டத்தையும், மாலை 6:30 மணிக்கு கோல்கட்டா மற்றும் லக்னோ அணிகளுக்கான ஆட்டத்தையும், காணலாம்.பொதுமக்கள் மகிழும் வகையில், டி.ஜே., இசை, சிறுவர்கள் விளையாடும் களம், உணவு மற்றும் குளிர்பான கடைகள் என்று பல விதமான ஸ்டால்கள் இருக்கும். இங்கு வரும் ரசிகர்களுக்கு முக்கிய வீரர்கள் கை எழுத்து போட்ட, 'டி-ஷர்ட்' குலுக்கல் முறையில் பரிசாக கிடைக்கும்' என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago