மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
13 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
13 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
13 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
13 hour(s) ago
புதுச்சேரி: பெரியார் நகரில் வாலிபர் வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் மூவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பெரியார் நகர் 10வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ருத்ரேஷ், 27; பெயிண்டர். இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் தரப்பிற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு, பெரியார் நகர், கங்கைமுத்து மாரியம்மன் கோவில் முன்பு நின்றிருந்த ருத்ரேஷ்சை 6 பேர் கொண்ட கும்பல் சராமாரி வெட்டி கொலை செய்தது. அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பலில் கவுதம், 24; ஈஸ்வர், 20; ஆனந்த், 23; ஆகிய மூவரை வில்லியனுார் போலீசார் கைது செய்து உருளையன்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகள், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த எழில், பரத், சதிஷ் ஆகிய மூவரை உருளையன்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago