மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், கத்தியுடன் நின்று வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் - திருக்காஞ்சி சாலையில், இரவு நேரங்களில் பொதுமக்களிடம் பணம், மொபைல் போன் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று, தவளக்குப்பம் குற்றப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், வழிப்பறி செய்யும் திட்டத்துடன், கையில் கத்தியுடன் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வசந்த், 32, பி.சி.பி., நகரை சேர்ந்த கோவிந்தசாமி, 31; சிங்கிரிகுடியை சேர்ந்த ஜெயபிரதாபன், 29; என தெரியவந்தது.மூவரையும் தவளக்குப்பம் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago