உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடி மின்னலுடன் திடீர் மழை 4 மணி நேரம் பவர் கட்

இடி மின்னலுடன் திடீர் மழை 4 மணி நேரம் பவர் கட்

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் நேற்று மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்ததாதல் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.புதுச்சேரியில், கடந்த சில மாதங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் லேசனா மழை பெய்து கொண்டிருந்தது. மதியம் 12:30 மணியளவில் நெட்டபாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.குறிப்பாக பண்டசோழநல்லுார் கிராமத்தில் நேற்று மதியம் 12:30 மணி முதல் 3:00 மணி வரை கனமழை பெய்தது. இதனால் இப்பகுதியில் 12:30 மணி முதல் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திடீர் கன மழையால் வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ