உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி இறந்த சோகம்; கணவர் தற்கொலை

மனைவி இறந்த சோகம்; கணவர் தற்கொலை

அரியாங்குப்பம், : மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 55. இவரது மனைவி இறந்து விட்டார். இவர் அந்த பகுதியில் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். மனைவி இறந்ததில் இருந்து சோகத்தில் அதிகமாக மது குடித்து வந்தார்.நேற்று வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று விட்டனர். அப்போது, அவர் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை