உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆடி கிருத்திகையை முன்னிட்டு சாரம் முருகர் வீதியுலா

ஆடி கிருத்திகையை முன்னிட்டு சாரம் முருகர் வீதியுலா

புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது.சாரத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நேற்று நடந்தது. காலையில் சுவாமிக்கு மகா அபிேஷகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து, சுவாமி வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் மற்றும் கோவில் குருக்கள், உபயதாரர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி