| ADDED : மே 20, 2024 04:38 AM
புதுச்சேரி, : பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில்,சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது.திரளானபக்தர்கள் தரிசனம் செய்தனர்.புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில்,36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி சன்னதியில் கடந்த 17ம்தேதி வசந்த உற்சவம் கோலகலமாக துவங்கியது. முதல் நாளில் மூலவர் ராமச்சந்திர மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில்அருள்பாலித்தார்.அதை தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் ராமர் -சீதாபிராட்டிக்கு, விசேஷ திருமஞ்சனம்நடந்தது, பின், புஷ்ப பந்தலில் சேவை சாதித்தனர்.இரண்டாம் நாளான 18ம் தேதியும் வசந்த மண்டபத்தில் ராமர்-சீதாவுக்கு திருமஞ்சனத்தை தொடர்ந்து, பழப்பந்தலில் சேவை சாதித்தனர். மூன்றாம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு ராமச்சந்திரமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 10:00 மணிக்கு சீதா - ராமர் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது.மாலையில் வசந்த மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம், தொடர்ந்து, காய்கறி பந்தலில் சீதா-ராமர் சேவை சாதித்தனர். இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்ததிரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.