உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த பள்ளிப்புதுப்பட்டு சோம நாதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 7ம் தேதி துவங்கியது. காலை, மாலை சிறப்பு பூஜை மற்றும் அபிேஷக ஆராதனைகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் 10ம் தேதி காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 10:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடந்தது.காலை 10:45 மணிக்கு மேள தாளங்கள் முழங்க கலசங்களில் திருமஞ்சன நீர் புறப்பட்டது. காலை 11:00 மணிக்கு விமான மஹா கும்பாபிேஷகம், 11:15 மணிக்கு விசாலாட்சி அம்பிகை சோமநாதீஸ்வரர் மகா கும்பாபிேஷகம் நடந்தது.கும்பாபி ேஷக விழாவை கோவில் பரம்பரை பூஜகர் வீரட்டநாத சிவாச்சார்யார் தலைமையில், அபிராம சுந்தரசிவாச்சார்யார், ஆலய பூஜகர் சோமநாதசிவச்சார்யார் ஆகியோர் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை