உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுகள் முதல்வருக்கு நன்றி

சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுகள் முதல்வருக்கு நன்றி

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுகள், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.புதுச்சேரியில் பணிக்கு விண்ணப்பித்துள்ள சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுதாரர்கள் அனைவருக்கும், ஒரு முறை தளர்வு அளித்து பணி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் உரையில் அறிவித்தார்.இதற்கு நன்றி தெரிவித்து, சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசுதாரர்கள் நலச்சங்கத்தின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் டேவிட் தலைமையில் முதல்வருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விரைவில் பணி வழங்கவும், அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில், நேரு எம்.எல்.ஏ., சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் தலைவர் முனுசாமி, பொதுச்செயலாளர் ஜவஹர், பொருளாளர் மணிவாணன், துணை பொதுச்செயலாளர் ஜெகநாதன் மற்றும் வாரிசுதாரர் சங்கத்தின் நிர்வாகிகள் ரமேஷ், டேனியல், பிரபு, ஜெயந்தி, அங்காளம்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்