மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறு: வாலிபர் கைது
1 hour(s) ago
மருத்துவ மாணவர் மாயம்
1 hour(s) ago
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
12 hour(s) ago
அரியாங்குப்பம் : மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த தொழிலாளி அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தார்.தவளக்குப்பம் அடுத்து டி.என்., பாளையம் பகுதியை சேர்ந்தவர், தெய்வேந்திரன், 42; இவர் கூலி தொழிலாளி. தொடர்ந்து மது குடித்து விட்டு, வேலைக்கு செல்லாமல் இருந்ததால், இவரது மனைவி கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், இவர், தனது பெற்றோர் வீட்டில் தங்கி மது குடித்து விட்டு, இரவு நேரங்களில் வீட்டு வாசலில் படுத்து விடுவார்.நேற்று முன்தினம் ஓவராக மது குடித்து விட்டு, வீட்டு வாசலில் படுத்திருந்தார். மறுநாள் காலையில் இவரது பெற்றோர் எழுந்து பார்க்கும் போது, அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
12 hour(s) ago