உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்து கரை ஒதுக்கிய ஆலிவ் ரெட்லி ஆமை

இறந்து கரை ஒதுக்கிய ஆலிவ் ரெட்லி ஆமை

பாகூர்: நரம்பை கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.ஆழ்கடலில் வாழும் அரிய வகை உயிரினமான ஆலிவ் ரெட்லிட் ஆமைகள் இனப் பெருக்க காலங்களில் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லவது வழக்கம். இதற்காக வரும், ஆலிவ் ரிட்லிட் ஆமைகள் மீன்பிடி வலைகள், கப்பல்கள், படகுகளில் சிக்கி காயமடைந்து உயிரிழந்து விடுகின்றன. இந்நிலையில், முட்டையிடுவதற்காக வந்த ஆலிவ் ரெட்லி ஆமை ஒன்று அடிப்பட்டு இறந்த நிலையில் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை