| ADDED : மார் 03, 2024 05:05 AM
புதுச்சேரி: பெங்களூருவில் குண்டுவெடிப்பை தொடர்ந்து, புதுச்சேரியில் போலீசார் வாகன சோதனை மற்றும் விடுதிகளில் ஆய்வு செய்தனர்.பெங்களூருவில் தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் வெடிகுண்டு வெடித்தது. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின் றனர். இந்நிலையில், புதுச்சேரி சுற்றுலா தளம் என்பதால் பாதுகாப்பை பலப் படுத்த உள்துறை உத்தரவிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று எஸ்.வி.பட்டேல் சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து, சுற்றலா பயணிகள் தங்கியுள்ள விடுதிகளில் ஆய்வு செய்தனர். இதுபோல் பல இடங் களில் போலீசார் திடீர் சோ தனையில் ஈடுப்பட்டனர்.