உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வக்கீல்களுக்கு உதவி தொகை முதல்வர் ரங்கசாமி வழங்கல்

வக்கீல்களுக்கு உதவி தொகை முதல்வர் ரங்கசாமி வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த இளம் வழக்கறிஞர்களுக்கு, மாதாந்திர உதவித்தொகைக்கான, காசோலையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி சட்டத்துறை சார்பில், 30 வயதிற்குட்பட்ட இளநிலை வழக்கறிஞர்களுக்கு, மாதாந்திர உதவித்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது, சட்டசபையில் முதல்வர் அலுவலகத்தில் நடந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை நிதிக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்ட துறை செயலர் கேசவன், சார்புச் செயலர் ஜானாஸ் ரஃபி (எ) ஜான்சி, சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி