கொசு தொல்லை
நெல்லித்தோப்பு, அண்ணா நகர் பகுதியில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி வருகிறது.பாஸ்கர்,நெல்லித்தோப்பு. தண்ணீர் விரயம்
ராஜ்பவன், நீடராஜப்பர் வீதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வழிந்தோடி வீணாகிறது.அலபர்ராயன், ராஜ்பவன். கழிவுநீர் சிலாப் சேதம்
பெரியக்காலாப்பட்டு, இ.சி.ஆர்., சாலையில்கழிவுநீர்வாய்க்கால் சிலாப் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.அமுதா,பெரியகாலாப்பட்டு. குழந்தைககளை வைத்து பிச்சை
முத்தியால்பேட்டை, கடைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனந்தன், முத்தியால்பேட்டை. முதியவர்கள் அவதி
கதிர்காமம் மருத்துவமனையில் மருந்துகள் வாங்க வயதானவர்கள் வெகுநேரமாகி நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.ராணி,கதிர்காமம். தெரு விளக்கு எரியவில்லை
நைனார்மண்டபம் திவான்கந்தப்பா நகரில் சில வீதிகளில் தெருவிளக்கு எரியவில்லை.மணி,நைனார்மண்டபம்.