உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்

மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்

புதுச்சேரி: வீட்டில் இருந்த மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.கோரிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகள் பிரியதர்ஷினி, 23; இவர் எம்.ஏ., பொருளாதரம் படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் தொடர்ந்து மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்தனர்.இந்நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்த பிரியதர்ஷினி திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன பிரியதர்ஷினியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை