உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரட்டிப்பு பண ஆசை காட்டி ரூ.3.60 லட்சம் மோசடி

இரட்டிப்பு பண ஆசை காட்டி ரூ.3.60 லட்சம் மோசடி

புதுச்சேரி : இரட்டிப்பு பணம் ஆசை காட்டி புதுச்சேரி நபரிடம் 3 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, கதிர்காமத்தை சேர்ந்த நபரை, இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால், இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என, நம்பிய அவர், மர்ம நபருக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். ஆனால், இதுவரையில் அனுப்பிய பணத்திற்கான இரட்டிப்பு பணம் வரவில்லை. மேலும், இன்ஸ்டாகிராம் நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், புதுசாரத்தை சேர்ந்த பெண் 18 ஆயிரத்து 400, பிருந்தவனத்தை சேர்ந்த நபர் 5 ஆயிரம் என, 3 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 400 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை