உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அடாவடி ஆட்டோக்காரர்களால் முடங்கிப்போன அரசு திட்டம்

 அடாவடி ஆட்டோக்காரர்களால் முடங்கிப்போன அரசு திட்டம்

ஆ ட்டோக்காரர்கள் மிரட்டலால் புதுச்சேரியில் அரசு திட்டமே நின்று போன கொடுமையை என்னவென்று சொல்வது. புதுச்சேரியில் முதல் முறையாக சுய உதவி குழு பெண்கள் கராத்தே பயிற்சியுடன் பேட்டரி ஆட்டோ ஓட்ட புதுச்சேரி நகராட்சி சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 38 பேட்டரி ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. இதில், 2 ஆட்டோக்கள் கடற்கரை சாலை, தலைமை செயலகம் துவங்கி, டுப்ளெக்ஸ் சிலை வரையிலும், பிற ஆட்டோக்கள் புதுச்சேரி நகரம் மற்றும் ஆரோவில் வரை இயக்க அனுமதி தரப்பட்டது. இந்த பேட்டரி ஆட்டோவில் பயணிப்பவர்கள், அதற்கான கட்டணத்தை எளிதாக செலுத்தும் வகையில் (ஆப்) செயலி ஒன்றையும் புதுச்சேரி நகராட்சி வெளியிட்டது. இதனால் குறைவான கட்ட ணத்தில் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் புதுச்சேரியில் கோலாகலமாக, கவர்னர் மற்றும் முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டது. இந்த பேட்டரி ஆட்டோக்களால் சில ஆட்டோக்காரர்கள் தங்கள் தொழிலுக்கு நஷ்டம் ஏற்படும் என கூறி மிரட்டல் விட்டதால், திட்டமே முற்றிலுமாக முடங்கிப் போய் புதுச்சேரி நகராட்சியில் அனைத்து பேட்டரி ஆட்டோக்களும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டன. யாரோ சில தனிநபர்கள் அரசு திட்டத்தை முடக்குவதும், அவர் மீது போலீஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் ஓலா, உபேர், ராபிடோ உள்ளிட்ட வாகனங்களின் செயல்பாட்டையும் சிலர் அடாவடியாக தடுத்து வருகின்றனர். அரசு அனுமதி அளித்த திட்டத்தை தடுக்கும் நபர்கள் மீது உடனடியாக கவர்னர் கைலாஷ்நாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Jeanmarc Posper
டிச 11, 2025 05:37

புதுச்சேரி காந்திவீதி வாடகைக்கு இருசக்கர வாகனம் விடுபவர்கள் அடாவடியாக சுற்றுலா பயணிகளும் படம் வசூல் செய்கின்றனர் மேலும் இவர்கள் வயதான வாகனங்களை கொடுத்து அவர்களிடம் பணம் பெற்று அவர்கள் திரும்ப வந்து கேட்கும் பொழுது அவர்களிடம் கைகலப்பில் ஈடுபடுகின்றனர் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் அவர்களிடம் கைகலப்பில் ஈடுபடுகின்றனர் இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கா


Jeanmarc Posper
டிச 11, 2025 05:33

இன்று புதுவையில் காந்திவீதியில் வாடகை விடும் இருசக்கர கடை நடத்தி வரும் தொழிற்சங்க தலைவர் என்ற பெயரில் அராஜகம் செய்து அடாவடித்தனமாக பழுதான வாகனங்களை கொடுத்து சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல் செய்து அதை அவர்கள் கேட்கும் பொழுது திருப்பி கொடுக்காமலும் அவர்களிடம் கைகலப்பில் ஈடுபடுகின்றனர் காந்தி எழுதிய முழுவதும் நிரூபுறமும் இவர்கள் இரு சக்கர வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர் இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை


Jeanmarc Posper
டிச 11, 2025 05:31

இதுபோன்ற சில நபர்கள் அரசாங்கத் திட்டத்திற்கு தடை போடுவதால் மக்களை சில நல்ல திட்டங்கள் சென்றடையாமல் போட்டு விடுகிறது இது போன்று சில இரு சக்கரம் வாகனம் வாடகை விடும் தொழிற்சங்க தலைவர் அவர் நடத்தும் கடை அடாபடியாக வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல் செய்கின்றன இது போன்று பழுதான வாகனங்களை கொடுத்து அவர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர் அவர்களது பணத்தை திருப்பி கொடுக்காமலும் அவர்களிடம் தகராறு செய்கின்றனர்


Jeanmarc Posper
டிச 11, 2025 05:28

இது போன்ற சிலரின் நடவடிக்கையால் அரசு நல்ல திட்டங்கள் மக்களை சென்றடையாமல் போகிறது


Public
டிச 07, 2025 18:18

பேட் boys


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை