உள்ளூர் செய்திகள்

குருபூஜை விழா

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் விஸ்வநாதசுவாமி ஜீவ சமாதி உள்ளது. இங்கு மகா குருபூஜை விழா நேற்று காலைநடந்தது.இதையொட்டி, காலை 9:00 மணிக்கு மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை10:30 மணி முதல் 12:30 மணி வரை, சிறப்பு பூஜைகள், அபி ேஷக ஆராதனைகள், மகா தீபாரதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை