உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் மேலாளரை தாக்கிய  ஒருவர் கைது: 3 பேருக்கு வலை

தனியார் மேலாளரை தாக்கிய  ஒருவர் கைது: 3 பேருக்கு வலை

புதுச்சேரி: திண்டிவனம் அடுத்த எண்டியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் 42; தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருகிறார். இவர் வேலை செய்யும், கார் ேஷா ரூம், விழுப்புரம் சாலை அரியூரில் உள்ளது. நேற்று முன்தினம், ேஷாரூம் வாசலில் 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். அவர்களை சுரேஷ் கண்டித்துள்ளார். அதில், ஆத்திரமடைந்த, அரியூர் பகுதியை சேர்ந்த சதீஷ், செல்வா, பாலு மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் ஆகிய 4 பேரும் சேர்ந்த சுரேைஷ தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்து, அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, சதிஷ், 29; கைது செய்தனர். மேலும், செல்வ உட்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை