சிறையில் மொபைல்போன் பறிமுதல்; கைதிகள் 9 பேர் மீது வழக்கு
புதுச்சேரி; காலாப்பட்டு மத்திய சிறையில் மொபைல் போன், புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, கைதிகள் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். காலப்பட்டு சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்பட்டதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சிறை முழுதும் சோதனை நடத்தினர். சமையல் கூட பகுதியில் ஹான்ஸ் 50 பாக்கெட், 30 பீடி கட்டு, கஞ்சா லைட்டர் மொபைல் போன் போன்றவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில் சில நாட்களுக்கு முன், சிறையில் இருந்து ஜாமினில் சென்ற ரிஷி குமார் 20, ஆனந்த் 20, ஆகியோர் நள்ளிரவில் முதலாவதாக உள்ள சிறை காம்பவுண்ட் மீது ஏறி குதித்து உள்ளே சென்று, இரண்டாவது காம்பவுண்ட் உள்ளே வீசி சென்றது தெரிய வந்தது. இவை சிறையில் உள்ள தாடி அய்யனார், சத்யா ஆகியோருக்கு வீசியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சிறையில் தண்டணை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளாக உள்ள பாபு, 19; சிலம்பரசன், 20; சிலம்பரசன், 21; சிவா, 20; பிரசாத்,19, ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.