உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேசிய விருது பெற்றவருக்கு பாராட்டு விழா

 தேசிய விருது பெற்றவருக்கு பாராட்டு விழா

புதுச்சேரி: தேசிய விருது பெற்ற பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை கூட்டுறவு உறுப்பினர் மோகன்தாசிற்கு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்க உறுப்பினர் மோகன்தாசிற்கு, ஜனாதிபதி தேசிய விருது வழங்கினார். தேசிய விருது பெற்ற சங்க உறுப்பினருக்கு, சங்கம் சார்பில், பாராட்டு விழா சங்க அலுவலகத்தில் நடந்தது. விழாவில் சங்க பதிவாளர் இளங்கோவன் தலைமை தாங்கி, தேசிய விருது பெற்ற மோகன்தாஸிற்கு நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில்,இணை பதிவாளர் சாரங்கபாணி, துணைப்பதிவாளர்குமரன், சங்க நிர்வாகி மமுல் வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை