உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய அளவிலான செஸ் போட்டி துவக்கம் 

தேசிய அளவிலான செஸ் போட்டி துவக்கம் 

புதுச்சேரி: அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேசிய அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். புதுச்சேரி மாநில செஸ் சங்கம் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு சார்பில், 39வது தேசிய அளவிலான 13 வயதிற்குட்பட்டோருக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3ம் தேதி துவங்கியது. வாணரப்பேட்டை, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த துவங்க விழாவில், முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமலோற்பவம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் லுார்துசாமி கலந்து கொண்டனர். போட்டியில், நாடு முழுதும் உள்ள 30க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த 13 வயத்திற்குட்ட 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில செஸ் சங்கத் தலைவர் சங்கர், செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்