உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டியிடம் 4 சவரன் அபேஸ் இருவருக்கு போலீஸ் வலை

மூதாட்டியிடம் 4 சவரன் அபேஸ் இருவருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் மூதாட்டியை ஏமாற்றி 4 சவரன் நகையை வாங்கிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, அம்பலத்தடையார் மடத்து வீதியைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 74. இவர் நேற்று காலை 10:30 மணியளவில் பெரிய மார்கெட்டுக்கு சென்றார். அங்கு வந்த வாலிபர்கர் இருவர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து, அவரிடம் இருந்த 4 சவரன் நகைகளை ஏமாற்றி வாங்கிக் கொண்டு, போலியான டாலரை கொடுத்து விட்டு தப்பி சென்றனர். அந்த டாலர் கவரிங் என்பதை அறிந்த கஸ்துாரி பெரியக்கடை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்