உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுச் சாவடிகளின் பாதுகாப்பு ஐ.ஜி., நேரில் ஆய்வு செய்தார்

ஓட்டுச் சாவடிகளின் பாதுகாப்பு ஐ.ஜி., நேரில் ஆய்வு செய்தார்

புதுச்சேரி:இந்திரா நகர் தொகுதி ஓட்டுச் சாவடிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி., நேற்று ஆய்வு செய்தார்.இந்திராநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (13ம் தேதி) நடக்கிறது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.ஜி., ஜே.கே.சர்மா நேற்று காலை தர்மாபுரி அரசு உயர்நிலைப்பள்ளி, முத்தரையர்பாளையம் ஆயி அம்மாள் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி, இளங்கோஅடிகள் அரசு மேனிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆய்வின் போது சீனியர் எஸ்.பி.,சந்திரன், எஸ்.பி. நந்தகோபால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்