உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கர்ப்பிணி மாயம் : போலீஸ் விசாரணை

 கர்ப்பிணி மாயம் : போலீஸ் விசாரணை

புதுச்சேரி: கர்ப்பிணி மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் கொடுத்தார். வில்லியனுார், கோபாலன் கடை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ரேவதி, 31; ஏழு மாதம் கர்ப்பிணியான இவர், சற்று மனநலம் பாதித்தவர். இதற்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் ரேவதி அவரது தாய் வீடான கணுவாப்பேட்டையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் இருந்து அவரை திடீரென காணவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வேல்முருகன் புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !