உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியிலும் சமச்சீர் கல்வி சட்டம் லட்சுமிநாராயணன் வேண்டுகோள்

புதுச்சேரியிலும் சமச்சீர் கல்வி சட்டம் லட்சுமிநாராயணன் வேண்டுகோள்

புதுச்சேரி : 'சமச்சீர் கல்விக்கான சட்டத்தை புதுச்சேரியிலும் நிறைவேற்ற வேண்டும்' என, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., கூறினார். சட்டசபையில் கேள்வி நேரத்தில், காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் எழுப்பிய கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டது. லட்சுமிநாராயணன்: சமச்சீர் கல்விக்கான சட்ட விதிகள் புதுச்சேரிக்கு இல்லாததை அரசு அறியுமா? அமைச்சர் கல்யாணசுந்தரம்: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி பள்ளிகளில் தமிழக அரசின் பாடத் திட்டம் பின்பற்றப்படுவதால் இதுதொடர்பாக தனி சட்ட விதிகளை உருவாக்கத் தேவையில்லை. லட்சுமிநாராயணன்: தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். அந்த சட்டம் நேரடியாக இங்கே வந்து விடுமா... புதுச்சேரிக்கென தனி சட்டத்தை இங்கேயும் இயற்ற வேண்டும். யாராவது வழக்கு தொடர்ந்தால் என்னாவது... முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் அமைக்கும் வரை, தமிழகத்தையே பின்பற்றுகிறோம். லட்சுமிநாராயணன்: தமிழகத்தை பின்பற்றுவதில் தவறு இல்லை. ஆனால், சட்ட அங்கீகாரம் தர வேண்டும். முதல்வர்: மாணவர்களுக்கு இந்த அரசு எப்போதும் உதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி