உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருவள்ளுவர் பள்ளியில் என்.எஸ்.எஸ்., கருத்தரங்கு

திருவள்ளுவர் பள்ளியில் என்.எஸ்.எஸ்., கருத்தரங்கு

புதுச்சேரி : திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளியில் என்.எஸ்.எஸ்., கருத்தரங்கு நடந்தது. திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் 'மாணவிகள் பிரச்னைகள் மற்றும் உரிமைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி முதல்வர் செல்வி தலைமை தாங்கினார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அஞ்சம்மாள் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார். இதனையடுத்து மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கருத்தரங்க ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உஷாபாய் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை