| ADDED : பிப் 11, 2024 02:07 AM
புதுச்சேரி: உழந்தைகீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு புரஜெக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி காஸ்மாஸ் சார்பில், புரஜெக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கி, பள்ளி தலைமையாசிரியர் இந்திராவிடம் புரஜெக்டரை வழங்கினார். முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி காஸ்மாஸ் தலைவர் தினேஷ்குமார், செயலாளர் முருகன், முன்னாள் தலைவர் ஆனந்த், ராஜகணபதி, லயன் சுரேஷ், மருதமலையப்பன், ஜீவானந்தம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாரி, காசிநாதன் பங்கேற்றனர்.