உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெண்ணுக்கு மிரட்டல் 3 பேருக்கு வலை

 பெண்ணுக்கு மிரட்டல் 3 பேருக்கு வலை

அரியாங்குப்பம்: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் தேடிவருகின்றனர். மணவெளியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகள் அக்சிலியாமேரி, 20. இவர், தனது உறவினர் வீடான அரியாங்குப்பம் அன்னை நகரில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பூந்தொட்டிகள் மற்றும் நாற்காலிகளை சேதப்படுத்தினர். அதனை கண்டித்த அக்சிலியாமேரியை, அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். புகாரின் பேரில், அரியாங்குப்பம் உதவி சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்